Friday, August 30, 2024

Ganapathy's Grand Adventure



In the bustling neighborhood of Rajakilpakkam, Chennai, lived a young boy named Ganapathy. He was a devotee of the elephant-headed god, Ganesha, and dreamed of visiting the famous Pillaiyarpatti temple on Vinayagar Chaturthi.
The day finally arrived, and Ganapathy was brimming with excitement. He was dressed as the god himself, wearing a colorful outfit with a large, painted elephant head. His parents, proud and supportive, accompanied him on the long journey.
As they traveled through the countryside, Ganapathy marveled at the changing scenery. He saw lush green fields, towering mountains, and quaint villages. Along the way, they stopped at a small temple to offer prayers and seek blessings.
When they finally reached Pillaiyarpatti, Ganapathy was overwhelmed by the grandeur of the temple. The towering gopuram, adorned with intricate carvings, seemed to touch the sky. Thousands of devotees thronged the temple grounds, their faces filled with devotion.
Ganapathy joined the crowd, his heart filled with joy. He offered prayers at the main shrine, seeking Ganesha's blessings for his family and friends. As he stood there, surrounded by the chanting and the aroma of incense, he felt a deep connection to the god he loved.
After the prayers, Ganapathy participated in the procession around the temple. He danced and sang along with the other devotees, his spirit soaring. As he walked, he felt a sense of peace and fulfillment, knowing that he had fulfilled his dream of visiting Pillaiyarpatti.
To Ganapathy's delight, he noticed that many other devotees were also dressed as Ganesha, joining him in the procession. Children and adults alike, all adorned in colorful elephant costumes, danced and sang together, creating a vibrant and joyful atmosphere.
The sight of so many people celebrating Ganesha together filled Ganapathy's heart with warmth. He realized that his love for the god was shared by countless others, and that together, they were creating a beautiful tapestry of devotion.
As the day drew to a close, Ganapathy and his family returned home, their hearts filled with gratitude. The journey had been long and tiring, but the memories they had created would last a lifetime. And Ganapathy knew that he would always cherish the day he had dressed as Ganesha, visited the sacred temple of Pillaiyarpatti, and experienced the joy of shared devotion.

A Helping Hand





The summer sun beat down mercilessly on the dusty road. As I pedaled my bicycle, my eyes scanned the horizon for any signs of civilization. The solitude was broken by a faint cry for help. I swerved my bike towards the source of the sound, my heart pounding with anticipation.
There, lying by the roadside, was a middle-aged man, his face contorted in pain. His legs were twisted at unnatural angles, clearly broken. Despite the scorching heat, he was shivering, his clothes stained with sweat and dirt.
"Can I help you?" I asked, my voice barely audible over the wind.
The man nodded weakly, his eyes filled with gratitude. "I need a lift. I'm trying to get to the nearest town."
Without hesitation, I helped him onto the back of my bicycle. He guided me through the winding roads, his directions faltering at times due to the pain. As we approached our destination, I couldn't help but feel a pang of unease. The man's final destination was a government wine shop.
I knew that alcohol abuse was a serious problem in many parts of India, and I couldn't shake the feeling that I was inadvertently contributing to it. However, I reminded myself that my primary goal was to help someone in need, regardless of their choices.
As we arrived at the wine shop, I helped the man off the bicycle. He thanked me profusely, his eyes filled with tears. As I watched him disappear into the shop, I couldn't help but feel a mix of relief and sadness. Relief that I had been able to assist someone in need, and sadness that I couldn't change the circumstances that led him to that place.
As I rode away, I couldn't shake the image of the man's suffering face. His story was a reminder of the fragility of life and the importance of compassion. It was a lesson that I would carry with me for the rest of my days.

The Tale of Ignatius the Inquisitive

Disclaimer: The characters and incidents depicted in the story are entirely fictional and do not represent any real persons or events. Any resemblance to actual persons, is purely coincidental.

The Tale of Ignatius the Inquisitive

Barnabas and Margaret lived in a quaint village nestled amidst rolling hills. Their son, Ignatius, was a curious soul with a thirst for knowledge that knew no bounds. He would spend hours poring over books, his mind constantly buzzing with questions.
One day, Ignatius stumbled upon a peculiar old book in the village library. It spoke of a hidden treasure buried deep within the nearby woods. The book hinted that only a person with a pure heart and a keen mind could find it. Ignatius was immediately captivated.
With a map drawn from the book, he set off into the woods. His parents, though worried, encouraged his adventurous spirit. As he ventured deeper, the path grew treacherous. Dense undergrowth obscured the way, and strange creatures rustled in the bushes.
Ignatius pressed on, his heart pounding with excitement and fear. He encountered a series of challenges: a winding river he had to cross, a steep cliff he had to climb, and a riddle he had to solve. With each obstacle he overcame, Ignatius felt a sense of accomplishment and a growing belief in himself.
Finally, he reached the spot marked on the map. There, beneath a towering oak tree, was a hidden chest. As he opened it, a blinding light filled the air, revealing a collection of ancient artifacts. Ignatius was awestruck. He had found the treasure!
But as he examined the artifacts, he realized that the true treasure was not the material wealth but the journey itself. He had learned about courage, perseverance, and the power of knowledge. He had also discovered the importance of listening to his heart and following his instincts.
Ignatius returned home, his heart brimming with joy and gratitude. His parents were overjoyed to see him safe and sound. They embraced him, proud of the young man he had become. And so, Ignatius, the inquisitive boy, had learned a valuable lesson: the greatest treasure is often the one we find within ourselves.

Wednesday, October 18, 2023

என் சாய் - முதல் அனுபவம

என்னுடைய சிறு வயதில்  எனக்கு பக்கத்து வீட்டில் சாய் பஜன் நடக்கும். நானும் கலந்து கொள்வேன். பஜனை பாட்டு பாடுவேன். ஆனால் அப்போது எனக்கு விவரம் தெரியாது. என் சகோதரியும் அருகில் உள்ள பெண் குழந்தைகளும் நாட்டிய நாடகம் தயார் செய்து கொண்டு புட்டபர்த்திக்கு செல்வார்கள். புரந்தரதாசர், கிருஷ்ணலீலா போன்ற நாட்டிய நாடகங்கள் சத்யசாய் முன்பு நடத்துவார்கள்.

என் முதல் அனுபவம்

நான் அப்பொழுது ஒரு லாரி ஆபீஸ் இல் பில் போடும் வேலையில் இருந்தேன். எனக்கு அப்பொழுது மாத சம்பளம் 200 ரூபாய், வருடம் 25 ரூபாய் இங்ரிமென்ட் கிடைக்கும்.
திடீரென சில பிரச்சனைகளின் காரணமாக அந்த லாரி ஆபீஸ் மூடப்பட்டது. நாங்கள் அந்த ஆபீஸை அன்ட்வோவர் செய்வதற்காக ஒரு ஆபீஸர் வந்திருந்தார். ஆனால்  நாங்கள் அவரிடம் எங்களின் வெறுப்பை காட்டினோம். எங்கள் வேலை போய்விட்டதன் காரணமாக அவரை அவமரியாதை செய்து விட்டோம், கேவலமாகவும் பேசி அவரை நாங்கள் அழ வைத்து விட்டோம்.
எங்கள் லாரி ஆபீஸ் கிண்டியில் இருந்தது. நாங்கள் சிறிது நேரம் அங்கிருந்து கிளம்பி கிண்டி சாய் பாபா கோவிலுக்கு சென்றோம். அது எங்களுக்கு சாய்பாபா கோவில் என்று தெரியாது, தெரியாமலே நாங்கள் உள்ளே நுழைந்து விட்டோம்.அதன் பிறகு அங்கு அமர்ந்து சிறிது நேரம் மௌனமாக இருந்தோம். எங்களுக்கே தெரியவில்லை எப்படி அப்படி ஒரு அமைதி எங்களுக்கு வந்தது என்று?. மனம் மிகவும் சாந்தமாக ஆனது. நாங்கள் செய்த செயலுக்காக நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். என்னுடன் வந்த நண்பரும் நானும் ஒரே சமயத்தில் நாம் செய்தது தவறு இல்லையா என்று கேட்டுக் கொண்டோம். எங்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் எப்படி அவ்வாறு தோன்றியது என்று தெரியவில்லை. என்னுடன் வந்தவர் முஸ்லிம் நண்பர். நாங்கள் இருவரும் மறுபடியும் ஆபீசுக்கு சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டோம். அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு அமைதியாக வீடு திரும்பினோம். இந்த அமைதி எனக்கு முதல்முறையாக ஏற்பட்டது. அப்படி ஒரு சாந்தமான நிகழ்வு எங்களுக்கு நடந்தது. அன்று முதல் எனக்கு சாய் பக்தி  மலர்ந்தது.
நான் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் படித்திருந்தேன் ஆனால் லாரி ஆபீஸ் வேலை செய்து கொண்டிருந்தேன் இரண்டு வருடமாக நான் இன்ஜினியரிங் மறந்து இருந்தேன். இந்த  வேலையில் இருந்து நீக்கப்பட்டவுடன் நான் உடனே சில கம்பெனிகளுக்கு இன்ஜினியரிங் வேலைக்காக முயற்சி செய்தேன். இதுவே என் வாழ்க்கையில் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. படிப்படியாக உயர்ந்து 35 வருட அனுபவம் பெற்றிருக்கிறேன். இப்பொழுது வாழ்வு நிறைந்து 60 வயதில் இருக்கிறேன். 
சத்ய சாய்பாபாவும் சீரடி சாய்பாபாவும் எனக்கு பல சமயங்களில் மன அமைதியை கொடுத்திருக்கிறார்கள். என் வாழ்வு முன்னேற நிறைய அருள்புரிந்து இருக்கிறார்கள். நான் எப்பொழுதெல்லாம் மனக்கஷ்டத்தில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறார்கள்....

Friday, February 11, 2022

ஸ்ரீ ஆஞ்சநேயர் 108 போற்றி

ஸ்ரீ ஆஞ்சநேயர் 108 போற்றி 

துன்பங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அனுமனுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது அனுமனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகளே சரணம்
 ஸ்ரீ ராமபக்தஅனுமனுக்கு நித்யம் ஜெயமங்களம் ஸ்ரீ ராமஜெயம்

துன்பம் போக்கும் ஆஞ்சநேயர் 108 போற்றி

1. ஓம் அனுமனே போற்றி
2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
3. ஓம் அறக்காவலனே போற்றி

 4. ஓம் அவதார புருஷனே போற்றி
5. ஓம் அறிஞனே போற்றி
6. ஓம் அடக்கவடிவே போற்றி
7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
15. ஓம் இசை ஞானியே போற்றி
16. ஓம் இறை வடிவே போற்றி
17. ஓம் ஒப்பிலானே போற்றி
18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
19. ஓம் கதாயுதனே போற்றி
20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
22. ஓம் கர்மயோகியே போற்றி
23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
25. ஓம் கடல் தாவியவனே போற்றி
26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
29. ஓம் கூப்பிய கரனே போற்றி
30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி
31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
39. ஓம் சூராதி சூரனே போற்றி
40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
44. ஓம் சோக நாசகனே போற்றி
45. ஓம் தவயோகியே போற்றி
46. ஓம் தத்துவஞானியே போற்றி
47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
49. ஓம் தீதழிப்பவனே போற்றி
50. ஓம் தீயும் சுடானே போற்றி
51. ஓம் நரஹரியானவனே போற்றி
52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
55. ஓம் பண்டிதனே போற்றி
56. ஓம் பஞ்சமுகனே போற்றி
57. ஓம் பக்தி வடிவனே போற்றி
58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
66. ஓம் பீம சோதரனே போற்றி
67. ஓம் புலனை வென்றவனே போற்றி
68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
69. ஓம் புண்ணியனே போற்றி
70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
71. ஓம் மதி மந்திரியே போற்றி
72. ஓம் மனோவேகனே போற்றி
73. ஓம் மாவீரனே போற்றி
74. ஓம் மாருதியே போற்றி
75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
79. ஓம் ராமதாசனே போற்றி
80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
81. ஓம் ராமதூதனே போற்றி
82. ஓம் ராம சோதரனே போற்றி
83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
90. ஓம் ருத்ர வடிவனே போற்றி
91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
93. ஓம் லங்கா தகனனே போற்றி
94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
96. ஓம் வாயுகுமாரனே போற்றி
97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
101. ஓம் விஸ்வரூபனே போற்றி
102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகளே சரணம்
 ஸ்ரீ ராமபக்தஅனுமனுக்கு நித்யம் ஜெயமங்களம் ஸ்ரீ ராமஜெயம்

Tuesday, January 25, 2022

அனுமன் வாலில் மணி

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.

தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.

போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர்,அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில். அதைக் கவனித்த ஸ்ரீராமன் கூறினார் " யாரும் கவலைப்பட வேண்டாம்.என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்று.

போர் ஆரம்பமாயிற்று.கடும்போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள்.வேறு வழியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் "இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைக் கடத்தியதற்காக ஸ்ரீராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை.வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன்.

கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன.
போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது.

திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன.ஒரே இருட்டு.நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.

ஒரு வானரம் சொன்னது " இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப்போய்விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி" என்றது

" சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப்போவதில்லை நம்மைக் காப்பாற்ற .நம் தலைவிதி இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான்" சொன்னது இன்னொரு வானரம்

" ஸ்ரீராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே,அவர் மட்டும் என்ன செய்தார்" இன்னொரு வானரம் சொன்னது. இதைக்கேட்ட மற்ற வானரங்களும் " ஆமாம் ஆமாம் " என்றன.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது.

" முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள்.நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்.எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ' ராம் ராம் ராம்' என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று சொன்னது.எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.

கடைசியில் ராமபாணத்தால் ராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள்.

அப்போது ஸ்ரீராமன் சொன்னார் " சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா"

" பிரபு! எண்ணிவிட்டேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் சுக்ரீவன்.

" இல்லை.மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா " என்றார் ஸ்ரீராமன்.

ஸ்ரீராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான்.

" தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை"

" அனுமா நீ யும் என்னுடன் வா.நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம். "என்றார் ஸ்ரீராமன்

அனுமனும் ஸ்ரீராமனும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள்,உடைந்து கிடந்த தேரின் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப்பார்த்தான் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை.

திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார்.

" அனுமா! அங்கேபார்.ஒரு பெரிய மணி தெரிகிறது."

ஸ்ரீராமன் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் விரைந்தார்கள் அந்த இடத்திற்கு .

அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமனுக்கு இது ஒரு பொருட்டா என்ன!

அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள்.

எதிரே ஸ்ரீராமனும் அனுமனும்.

வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர்.

"பிரபு ! என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம்.எங்களை மன்னித்து அருள வேண்டும்" என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின.

அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ஸ்ரீராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு.

அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து சொன்னார்

" அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா?

இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் கிட்டும் "
என்று வாழ்த்தினார்.

பின் குறிப்பு: கர்நாடகா,ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கிக்கொண்டிருப்பதாக இருக்கும்.

"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"

ஜெய் ஆஞ்சநேயா போற்றி❤️❤️❤️❤️❤️ஜெய் ஆஞ்சநேயா போற்றி❤️❤️❤️❤️❤️ஜெய் ஆஞ்சநேயா போற்றி❤️❤️❤️❤️❤️
ஜெய் ஆஞ்சநேயா போற்றி❤️❤️❤️❤️❤️ஜெய் ஆஞ்சநேயா போற்றி❤️❤️❤️❤️❤️ஜெய் ஆஞ்சநேயா போற்றி❤️❤️❤️❤️❤️
ஜெய் ஆஞ்சநேயா போற்றி❤️❤️❤️❤️❤️ஜெய் ஆஞ்சநேயா போற்றி❤️❤️❤️❤️❤️ஜெய் ஆஞ்சநேயா போற்றி❤️❤️❤️❤️❤️

Sunday, September 12, 2021

குட்டி கதை - ஊக்கம்

ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன.

ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்.., மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, *நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன்* அந்த மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர், குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான், அந்த விவசாயி. பின்பு சிறிது நேரம் கழித்து, அங்கு வந்த ஆடு, அந்தக் குதிரையிடம், நண்பா, நீ எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள் என்று அந்த குதிரையை ஊக்குவித்தது. மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார். அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் நாளை குதிரை நடக்கவில்லை என்றால், அதனைக் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் பரவிவிடும் என்று சொல்லிச் சென்றார். இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர் சென்றதும், குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள் என்று சொல்லியது. அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து போகும் படியாக குதிரை ஓடியது. மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.

அவன் மருத்துவரிடம், என் குதிரை நன்றாகக் குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம். என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம் என்றான். குதிரை ஆட்டின் *ஊக்கத்தால்* எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்...!!!

*நீதி:-*

இப்படித்தான் *இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது* என்பதை உணராமல், பலரும் உண்மையைப் *பலி கொடுத்துக்* கொண்டிருக்கிறார்கள்.