அந்த முதியவர் தட்டுத் தடுமாறியபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். எனது டூ வீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. என்னங்க ஆச்சுனு கேட்டேன். வேகமாக வந்த ஆட்டோ சக்கரம் காலுல ஏறிடுச்சு என்றார். வாங்க..., எனக்கு தெரிந்த டாக்டர் பக்கத்துலதான் இருக்கார், கட்டுப் போட்டு மொதல்ல ரத்தம் கசியறத நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்ஷனும் போட்டுக்கலாம்! என்றேன். வேண்டாம் என்று மறுத்தவரை விடாப்பிடியாக அழைத்து சென்றேன்.
எல்லாம் முடியவும்..., மணி என்ன, நேரமாயிடுச்சே, நேரமாயிடுச்சே...! என்று பறந்தார் பெரியவர். அப்படி என்னங்க அவசரம்..?! என்றேன் நான். என் பெண்டாட்டி பசியோட வீட்டில இருக்கா. அவளுக்கு இட்லி வாங்கிட்டு போகணும்..! என்றார். என்ன பெரியவரே..., உங்க காலுல அடிப்பட்டிருக்கு..., இப்ப இட்லியா முக்கியம்...?! லேட்டா போன தான் என்ன..., திட்டுவாங்களா...?! என்று சீண்டினேன். அதற்கு அவர் அவ அஞ்சு வருஷமா மன நிலை பாதிச்சு நினைவில்லாம இருக்கா. எல்லா ஞாபகமும் போயிடுச்சி! நான் யார்னு கூட அவளுக்குத் தெரியாது...! என்றார்.
நான், அப்படிப்பட்டவங்க உங்களை ஏன் லேட்டுன்னு எப்படி கேப்பாங்க...? அவங்களுக்குத் தான் உங்களை யாரென்றே தெரியாதே! கவலை படாதீங்க என்றேன். அதற்கு அந்த முதியவர் புன்னகைத்த படியே என்னை பார்த்து சொன்னார் ஆனா அவ யாருன்னு எனக்குத் தெரியுமே. *இது தான் தார்மீகத் தாம்பத்யமோ..?!!*
இதுதான் நம் அடையாளம். நம் அடையாளத்தை இழக்காமல் இருக்க நம் சந்ததிகளுக்கு அன்பை போதியுங்கள்.
No comments:
Post a Comment