சித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாய் கேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித். அது பொய், அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!
கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார். சித் கடைக்கு பின்னால் துணி தைத்துக் கொண்டிருக்கும் ஹாரியிடம் இந்த ட்ரெஸ் என்னப்பா விலை என்று கத்துவார். ஹாரி அங்கிருந்து எண்ணூறு என்பார். சித் உடனே எவ்வளோ என்று மீண்டும் கேட்பார். எண்ணூறு டா செவிட்டு முண்டமே என்று ஹாரி பதிலுக்கு கத்துவார்.
சித்திக் கஸ்டமரிடம் திரும்பி ஐநூறு என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்து விட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்! எண்ணூறு என்று கேட்ட மனதிற்கு ஐநூறு என்பது மிக சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது.
இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு. அந்த துணியின் உண்மையான மதிப்பு முன்னூறு ரூபாய் தான்.!
No comments:
Post a Comment