ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகி விடுகிறது. அதை குணப்படுத்த மலை உச்சியில் உள்ள சஞ்சீவ மலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் குணமாகும். அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால் தான் முடியும்.
அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள். அதில் முதலாமவன் கொண்டு வருகிறேன் என கிளம்புகிறான். தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது. நான் உன் பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும். வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். நடப்பதை நிறுத்தக் கூடாது. நடந்து கொண்டே இருக்க வேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்கக் கூடாது முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழி காட்டிச் சென்றது. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்க வில்லை என்னாயிற்று என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டான். கற்சிலையாகி விடுகிறான்.
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான். கிட்ட தட்ட நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதி தூரம் வந்து விடுகிறான். திடீரென சிரிப்பு ஒலி கேட்கிறது. ஆர்வம் மிகுதியால் திரும்பி பார்க்கிறான். அவனும் கற்ச்சிலையாகி விடுகிறான்.
அடுத்து மூன்றாமவன் வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். பின்னால் அலறல் சத்தம், சிரிப்பொலி மாறி மாறி கேட்டாலும் இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான். வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்.
*நீதி:-* பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்து விட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது.
நீதி; ஒரு வீட்ல முதல் இரண்டு பேர் தத்தியா இருப்பாங்க. எதாவது முக்கிய வேலனா மூணாவது ஆள முதல்லயே அனுப்புங்க
No comments:
Post a Comment