Thursday, August 5, 2021

குட்டி கதை- சோதனை

நள்ளிரவு ஒரு மணி, நகரின் ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் கார்பார்க்கிங்கில் காரை பார்க் செய்து விட்டு, லிப்டை நோக்கி போனார்கள் அந்த மூன்று இளைஞர்களும்....

லிப்ட் ரிப்பேர் சார்!... சரி செய்ய இரண்டு நாளாகும் என்று  வாட்ச்மேன் சொன்னதை கேட்டு திகைத்துப் போனார்கள்..., காரணம் அவர்கள் வீடு ஐம்பதாவது மாடியில் இருக்கிறது..... 

வேறு வழியில்லை..., படியில் நடந்தேயாக வேண்டிய சூழ்நிலை..., மூன்று பேரும் ஆளுக்கொரு கதை சொல்லிக்கொண்டே, அலுப்பு தெரியாமல் நடந்து செல்வதென, முடிவெடுத்தனர். 

முதலாமவன் ஓரு காமெடி கதை சொன்னான். கதை முடிய இருபத்தைந்தாவது மாடிக்கு வந்து விட்டார்கள். இரண்டாவது ஆள் ஒரு ரொமான்ட்டிக் காதல் கதை சொன்னான். கதை முடிய நாற்பத்தியெட்டாவது மாடிக்கு வந்துவிட்டார்கள்.

இப்பொழுது மூன்று பேரும் தொப்பலாய் நனைந்து போய் மூச்சு வாங்கினார்கள். மூன்றாவது ஆளிடம், நண்பா நாம வீடு வர்றதுக்கு இன்னும் இரண்டு மாடிதான் இருக்கு, அதற்குள் முடியிற மாதிரி ஒரு குட்டி கதை சொல் என்றார்கள்.

அவன் சொன்னான், ஒரே வரியில் முடிகிற மாதிரி ஒரு திகில் கதை இருக்கு...! அதுவும் உண்மைக் கதை...! சொல்லவா? என்றான்....!

இருவரும் ஆர்வத்துடன், சொல்லுடா என்றார்கள்..! அவன் சொன்னான்...

*நண்பா, வீட்டுச் சாவியை கார்லயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன்*

*வாழ்க வளமுடன்!*

No comments:

Post a Comment